திருமுருகாற்றுப்படை - மூலம்
திருப்பரங்குன்றம்
உலகம்
உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ்
ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற
இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த்
தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த்
தேய்த்த செல்லுறழ் தடக்கை 5
மறுவில்
கற்பின் வாணுதற் கணவன்
கார்கோள்
முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ்
விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல்
தலை இய தண்ணறுங் கானத்து
இருள்படப்
பொதுளிய பராரை மராஅத்து 10
உருள்பூந்
தண்டார் புரளும் மார்பினன்,
மால்வரை
நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி
கவைஇய ஒண்செஞ் சீறடி,
கணைக்கால்
வாங்கிய நுசுப்பின், பணைத்தோள்,
கோபத்
தன்ன தோயாப் பூந்துகில், 15
பல்காசு
நிரைத்த சில்காழ் அல்குல்,
கைபுனைந்து
இயற்றாக் கவின்பெறு வனப்பின்,
நாவலொடு
பெயரிய பொலம்புனை அவிரிழை,
சேணிகந்து
விளங்கும் செயிர்தீர் மேனி,
துணையோர்
ஆய்ந்த இணையீர் ஓதிச் 20
செங்கால்
வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட்
குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ
வுத்தியடு வலம்புரி வயின்வைத்துத்
திலகம்
தைஇய தேங்கமழ் திருநுதல்
மகரப்
பகுவாய் தாழமண் ணுறுத்துத் 25
துவர
முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண்
சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ
மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின்று
எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு
பிணையல் வளைஇத் துணைத்தக 30
வண்காது
நிறைந்த பிண்டி ஒண்டளிர்
நுண்பூண்
ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குறடு
உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ்
மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ்
இளமுலைக் கொட்டி விரிமலர் 35
வேங்கை
நுண்டாது அப்பிக் காண்வர
வெள்ளிற்
குறுமுறி கிள்ளுபு தெறியாக்
'கோழி ஓங்கிய
வென்றடு விறற்கொடி
வாழிய
பெரி¦’தன்று ஏத்திப்
பலருடன்
சீர்திகழ்
சிலம்பகம் சிலம்பப் பாடி 40
சூரர
மகளிர் ஆடும் சோலை
மந்தியும்
அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பும்
மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண்
கண்ணி மிலைந்த சென்னியன்,
பார்முதிர்
பனிக்கடல் கலங்கவுள் புக்குச் 45
சூர்முதல்
தடிந்த சுடரிலை நெடுவேல்
உலறிய
கதுப்பின் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப்
பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கட்
கூகையடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை
அலைக்கும் காதின் பிணர்மோட்டு
50
உருகெழு
செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி
ஆடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்தொட்
டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித்
தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு
விறற்களம் பாடித்தோள் பெயரா 55
நிணம்தின்
வாயள் துணங்கை தூங்க
இருபே
ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு
வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர்
நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல்
தடிந்த மறுவில் கொற்றத்து 60
எய்யா
நல்லிசைச் செவ்வேற் சேஎய்,
சேவடி
படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி
கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ
நயந்தனை யாயின், பலவுடன்
நன்னர்
நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப 65
இன்னே
பெறுதிநீ முன்னிய வினையே:
செருப்புகன்று
எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை
பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த்
தேய்த்த போரரு வாயில்
திருவீற்
றிருந்த தீதுதீர் நியமத்து 70
மாடமலி
மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற்று
அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள்
தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ்
நெய்தல் ஊதி எற்படக்
கண்போல்
மலர்ந்த காமர் சுனைமலர் 75
அஞ்சிறை
வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து
உறைதலும் உரியன் ; அதாஅன்று,
2. திருச்சீர் அலைவாய்
வைந்நுதி
பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா
மாலை ஓடையடு துயல்வரப்
படுமணி
இரட்டும் மருங்கின் கடுநடைக்
80
கூற்றத்து
அன்ன மாற்றரு மொய்ம்பின்
கால்கிளர்ந்
தன்ன வேழ மேல்கொண்டு
ஐவேறு
உருவின் செய்வினை முற்றிய
முடியடு
விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ்
இமைப்பின் சென்னிப் பொற்ப 85
நகைதாழ்பு
துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கு
இயற்கை வாண்மதி கவைஇ
அகலா
மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில்
கொள்கைத் தந்தொழில் முடிமார்
மனனேர்பு
எழுதரு வாள்நிற முகனே 90
மாயிருள்
ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர்
விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம்,
ஆர்வலர்
ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின்
உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம்,
மந்திர
விதியின் மரபுளி வழாஅ 95
அந்தணர்
வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
எஞ்சிய
பொருள்களை ஏமுற நாடித்
திங்கள்
போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம்,
செறுநர்த்
தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள்
நெஞ்சமொடு களம்வேட்டன்றே ஒருமுகம் 100
குறவர்
மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல்
வள்ளியடு நகையமர்ந் தன்றே.
ஆங்குஅம்
மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்
ஆரம்
தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி
வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு 105
வண்புகழ்
நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல்
மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை; உக்கம்
சேர்த்தியது ஒருகை;
நலம்பெறு
கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;
அங்குசங்
கடாவ ஒருகை, இருகை 110
ஐயிரு
வட்டமொடு எஃகுவலந் திரிப்ப,
ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை
தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ்
தொடியடு மீமிசைக்கொட்ப, ஒருகை
பாடின்
படுமணி இரட்ட, ஒருகை 115
நீனிற
விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை
வானர
மகளிர்க்கு வதுவை சூட்ட,
ஆங்குஅப்
பன்னிரு கையும் பாற்படஇயற்ற,
அந்தரப்
பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந்
திசைப்ப, வால்வளை ஞரல, 120
உரந்தலைக்
கொண்ட உருமிடி முரசமொடு
பல்பொறி
மஞ்ஞை வெல்கொடி அகவ,
விசும்பஆ
றாக விரைசெலல் முன்னி,
உலகம்
புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச்
சேறலும் நிலைஇய பண்பேஅதான்று, 125
3. திருவாவினன்குடி
சீரை
தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி
புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற
இமைக்கும் உருவினர் மானின்
உரிவை
தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து
இயங்கும் யாக்கையர் நன்பகல்
130
பலவுடன்
கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம்
நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர்
அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு
ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம்
கடிந்த காட்சியர் இடும்பை 135
யாவதும்
அறியா இயல்பினர் மேவரத்
துனியில்
காட்சி முனிவர் முற்புக,
புகைமுகந்
தன்ன மாசில் தூவுடை
முகைவாய்
அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு
வைத்த செய்வுறு திவவின் 140
நல்லியாழ்
நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி
மேவலர் இன்னரம்பு உளர,
நோயின்று
இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர்
புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை
கடுக்கும் திதலையர் இன்னகைப் 145
பருமம்
தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மாசில்
மகளிரொடு மறுவின்றி விளங்க,
கடுவொடு
ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென
உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப்
புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் 150
புள்ளணி
நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலைவயின்
உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து
விளங்கும் இமையா முக்கண்
மூவெயில்
முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப்பத்து
அடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி
முற்றிய வென்றடு கொற்றத்து 155
ஈரிரண்டு
ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந்
தடக்கை உயர்த்த யானை
எருத்தம்
ஏறிய திருக்கிளர் செல்வனும்,
நாற்பெருந்
தெய்வத்து நன்னகர் நிலைஇய 160
உலகம்
காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ்
மூவரும் தலைவ ராக
ஏமுறு
ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை
பயந்த தாவில் ஊழி
நான்முக
ஒருவற் சுட்டிக் காண்வர 165
பகலிற்
றோன்றும் இகலில் காட்சி
நால்வேறு
இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று
இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத்
தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந்
தன்ன செலவினர் வளியிடைத் 170
தீயெழுந்
தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித்
தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை
மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக்
கொட்பினர் வந்துடன் காணத்
தாவில்
கொள்கை மடந்தையடு சின்னாள் 175
ஆவினன்குடி
அசைதலும் உரியன்: அதான்று,
4. திருவேரகம்
இருமூன்று
எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச்
சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு
இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற்
கழிப்பிய அறன்நவில் கொள்கை 180
மூன்றுவகைக்
குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்
பாளர் பொழுதறிந்து நுவல,
ஒன்பது
கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக்
காழகம் புலர உடீஇ,
உச்சிக்
கூப்பிய கையினர் தற்புகழ்ந்து 185
ஆறெழுத்து
அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல்
மருங்கில் நவிலப் பாடி
விரையுறு
நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து
உறைதலும் உரியன்: அதான்று,
5. குன்றுதோறு ஆடல்
பைங்கொடி
நறைக்காய் இடையிடுபு வேலன் 190
அம்பொதிப்
புட்டில் விரைஇக் குளவியடு
வெண்கூ
தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து
அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில்
வல்விற் கொலைஇய கானவர்
நீடமை
விளைந்த தேக்கள் தேறல் 195
குன்றகச்
சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச்
சிறுபறைக் குரவை அயர
விரலுளர்ப்பு
அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்
குண்டுசுனை
பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த
கோதை அணைத்த கூந்தல் 200
முடித்த
குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால்
மராஅத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத்
தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ்
அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண்
டன்ன மடநடை மகளிரொடு 205
செய்யன்
சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத்
தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன்
கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன்
கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன்
மஞ்ஞையன் புகரில் சேவலங் 210
கொடியன்
நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த்
தன்ன இன்குரல் தொகுதியடு
குறும்பொறிக்
கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற்
கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ்
தடக்கையின் இயல ஏந்தி 215
மென்றோட்
பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ
றாடலும் நின்றதன்பண்பே; அதான்று,
6.
பழமுதிர் சோலை
சிறுதினை
மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக்
கொடியடு வயிற்பட நிறீஇ
ஊரூர்
கொண்ட சீர்கெழு விழவினும், 220
ஆர்வலர்
ஏத்த மேவரும் நிலையினும்,
வேலன்
தைஇய வெறியயர் களனும்,
காடும்
காவும் கவின்பெறு துருத்தியும்,
யாறும்
குளனும் வேறுபல் வைப்பும்,
சதுக்கமும்
சந்தியும் புதுப்பூங் கடம்பும், 225
மன்றமும்
பொதியிலும் கந்துடை நிலையினும்
மாண்டலைக்
கொடியடு மண்ணி அமைவர
நெய்யடு
ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம்
பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள்
உருவின் இரண்டுடன் உடீஇச் 230
செந்நூல்
யாத்து வெண்பொரி சிதறி
மதவலி
நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியடு
விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச்
செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு
மஞ்சளடு நறுவிரை தெளித்துப் 235
பெருந்தண்
கணவீர நறுந்தண் மாலை
துணையற
அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச்
சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை
எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை
அருவியடு இன்னியம் கறங்க 240
உருவப்
பல்பூதத் தூஉய் வெருவரக்
குருதிச்
செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம்
நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப்
படுத்த உருகெழு வியல்நகர்
ஆடுகளம்
சிலம்பப் பாடிப் பலவுடன் 245
கோடுவாய்
வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப்
பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர்
வேண்டியாங்கு எய்தனர் வழிபட
ஆண்டாண்டு
உறைதலும் அறிந்த வாறே
ஆண்டாண்டு
ஆயினும் ஆக; காண்தக 250
முந்துநீ
கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்
கைதொழூஉப்
பரவிக் காலுற வணங்கி,
‘நெடும்பெருஞ்
சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள்
ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர்
பயந்த ஆறமர் செல்வ! 255
ஆல்கெழு
கடவுட் புதல்வ! மால்வரை
மலைமகள்
மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி
வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி
சிறப்பின் பழையோள் குழவி!
வானோர்
வணங்குவில் தானைத் தலைவ! 260
மாலை
மார்ப! நூலறி புலவி!
செருவில்
ஒருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர்
வெறுக்கை! அறிந்தோர்
சொல்மலை!
மங்கையர்
கணவ! மைந்தர் ஏறே!
வேல்கெழு
தடக்கைச் சால்பெருஞ் செல்வ! 265
குன்றம்
கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு
நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர்புகழ்
நன்மொழிப் புலவர் ஏறே!
அரும்பெறல்
மரபின் பெரும்பெயர் முருக!
நசையுநர்க்கு
ஆர்த்தும் இசைபே ராள! 270
அலந்தோர்க்கு
அளிக்கும் பொலம்பூண் சேஎய்!
மண்டமர்
கடந்தநின் வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த்
தாங்கும் உருகெழு நெடுவேஎள்!
பெரியோர்
ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!
சூர்மருங்கு
அறுத்த மொய்ம்பின் மதவலி! 275
போர்மிகு
பொருந! குரிசில்!’ எனப்பல
யானறி
அளவையின் ஏத்தி ஆனாது,
‘நின்னளந் தறிதல்
மன்னுயிர்க் கருமையின்
நின்னடி
உள்ளி வந்தனென்; நின்னொடு
புரையுநர்
இல்லாப் புலமை யோய்!’எனக் 280
குறித்தது
மொழியா அளவையிற் குறித்துடன்
வேறுபல்
உருவின் குறும்பல் கூளியர்
சாறுஅயர்
களத்து வீறுபெறத் தோன்றி,
‘அளியன் றானே
முதுவாய் இரவலன்
வந்தோன்
பெரும!நின் வண்புகழ்
நயந்¦’தன 285
இனியவும்
நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம்
சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய்
நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால்
உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ்
தெய்வத்து இளநலங் காட்டி, 290
‘அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர¦’வன
அன்புடன்
நன்மொழி அளைஇ விளிவின்று
இருள்நிற
முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ
யாகித் தோன்ற விழுமிய
பெறலரும்
பரிசில் நல்கும்;அதி பலவுடன் 295
வேறுபல்
துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர
முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை
அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு
நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கமழ்
அலரிறால் சிதைய நன்பல 300
ஆசினி
முதுசுளை கலாவ மீமிசை
நாக
நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக
முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி
குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை
வான்கோடு தழீஇத் தத்துற்று 305
நன்பொன்
மணிநிறம் கிளரப்பொன் கொழியா
வாழை
முழுமுதல் துமியத் தாழை
இளநீர்
விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக்
கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை
மஞ்ஞை பலவுடன் வெரீஇக் 310
கோழி
வயப்பெடை இரியக் கேழலொடு
இரும்பனை
வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர்
யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல்
விடரளைச் செறியக் கருந்கோட்டு
ஆமா
நல்லேறு சிலைப்பச் சேணின்று 315
இழுமென
இழிதரும் அருவிப்
பழமுதிர்
சோலை மலைகிழ வோனே.
Comments
Post a Comment